கேள்வி-3: உணர்ச்சி என்றால் என்ன? உணர்ச்சி வசப்படுவது என்றால் என்ன? இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?
1. உணர்ச்சி என்றால் என்ன?
உணர்ச்சி என்பது மனிதரின் உள்ளத்தில் இயல்பாக எழும் மனநிலை அல்லது மன அசைவு ஆகும்.
அதாவது கீழ்கண்டவைகளை கவனியுங்கள்:
- சந்தோஷம் (Joy/Happiness)
- துக்கம் (Sadness) & வருத்தம் (Sorrow)
- கோபம் (Angry)
- பயம் (Fear)
- அன்பு (Love & Affection)
இவை எல்லாம் உணர்ச்சிகள் ஆகும். இவை எல்லாம் பாவம் அல்ல.
உணர்ச்சி நமக்கு வருவது தவறு அல்ல — அது மனித இயல்பு. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 'உணர்ச்சி'யை வெளிக்காட்டுகிறோம்.
உதாரணம்:
-
இயேசு லாசருவின் மரணத்தில் அழுதார் (யோவான் 11:35) – இது உணர்ச்சி.
-
தாவீது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் உணர்ச்சி காட்டினான்.
2. உணர்ச்சி – தேவன் கொடுத்த மனித இயல்பு
தேவன் மனிதனை உருவாக்கும்போது, உணர்ச்சியில்லாத இயந்திரமாக உருவாக்கவில்லை. உணர்ச்சி கொண்ட மனிதராக உருவாக்கினார்.
சங்கீதம் 42:5 – “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?”
சங்கீத புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'மனித உணர்ச்சி' வெளிப்பட்டு இருப்பதை காணலாம். மேலும் புலம்பல் புத்தகம் கூட உணர்ச்சியை வெளிப்படுத்தும் புத்தகமே!
ஆதியாகமம் முதற்கொண்டு வெளிப்படுத்தின விசேஷம் வரையுள்ள அனைத்து புத்தகங்களிலும் மனித உணர்ச்சிகள் வெளிப்பட்டு இருக்கும்.
3. உணர்ச்சி வசப்படுவது – ஆபத்தான நிலை?
உணர்ச்சி வசப்படுவது என்றால்,
- அந்த உணர்ச்சி நம்மை ஆட்சி செய்ய விடுவது
- சிந்தனை, விவேகம், கட்டுப்பாடு எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுவது
- சிந்தனை மங்கும்
- வார்த்தைகள் கட்டுப்பாடின்றி வரும்
- முடிவுகள் தவறாகும்
அப்போது
- கோபத்தில் தவறான வார்த்தை பேசுவோம்
- பயத்தில் தவறான முடிவு எடுப்போம்
- வருத்தத்தில் நம்பிக்கையை இழப்போம்
இங்கு பிரச்சனை உணர்ச்சி இருப்பது இல்லை, உணர்ச்சி நம்மை நடத்துவது தான்.
உதாரணம்:
-
காயின் கோப உணர்ச்சிக்கு வசப்பட்டு ஆபேலை கொன்றான் (ஆதி 4)
-
சவுல் பொறாமை உணர்ச்சிக்கு அடிமையாகி தாவீதைக் கொல்ல முயன்றான்
இதனால் தான் தேவன் காயினை கீழ்கண்டவாறு எச்சரித்தார்:
ஆதியாகமம் 4:6–7
4:6. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
4:7. நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
ஆனால் காயின் கோப உணர்ச்சிக்கு வசப்பட்டான்.
4. வேதாகமம் என்ன சொல்லுகிறது?
நீதிமொழிகள் 16:32
- 16:32. பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
கலாத்தியர் 5:22–23
ஆவியின் கனிகள் என்ன?
- அன்பு
- சமாதானம்
- சுயகட்டுப்பாடு (self Control)
பைபிள் உணர்ச்சியை அழிக்கச்சொல்லவில்லை, அதனை கட்டுப்படுத்தச் சொல்கிறது.
5. இயேசு – நம்முடைய சிறந்த மாதிரி
இயேசுவுக்கு
- கோபம் இருந்தது
- துக்கம் இருந்தது
- வலி இருந்தது
ஆனால் இயேசு எப்படி உணர்ச்சிகளை கையாண்டார்?
மத்தேயு 26:39
- 26:39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
இயேசுவிற்கு உணர்ச்சி இருந்தது, ஆனால் உணர்ச்சி இயேசுவை நடத்தவில்லை, பிதாவின் சித்தமே நடத்தினது. சுருக்கமாக சொல்வதென்றால் உணர்ச்சி வரலாம், அழலாம், வருத்தப்படலாம் ஆனால், உணர்ச்சியால் தீர்மானிக்க வேண்டாம் உணர்ச்சியால் பேச வேண்டாம்.
ரோமர் 8:14
“மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” ().
நீதிமொழிகள் 29:11
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்
Comments
Post a Comment