2 கொரிந்தியர் 6: பரிசுத்தமே உங்கள் அழைப்பு! சமரசம் உங்கள் அழிவு - ஊழியர்களே எழும்புங்கள்

அன்பான சகோதர சகோதரிகளுக்கும், ஊழியர்களுக்கும்,

இன்று நீங்கள் கேட்கப் போகும் செய்தி
உங்களை ஆறுதல் அளிக்க மட்டும் இல்லை…

  • அது உங்களை அதிரவைக்கும்!
  • அது உங்களை மாற்றும்!

நாம் வாழும் காலம் மிகவும் ஆபத்தான காலம்…

  • சபை இருக்கிறது… ஆனால் அங்கு பரிசுத்தம் குறைகிறது
  • ஊழியம் இருக்கிறது… ஆனால் ஊழியத்தில் உலகத்தோடு சமரம் அதிகரித்துள்ளது
  • ஆராதனை இருக்கிறது… ஆனால் சத்தியம் குறைகிறது

இன்று தேவன் கேட்கிறார்:

  • “நீங்கள் உண்மையாக வாழ்கிறீர்களா? அல்லது நடிக்கிறீர்களா?”
  • “நீங்கள் பரிசுத்தமாக வாழ்கிறீர்களா? அல்லது உலகத்தோடு சமரம் செய்துகொண்டு வாழ்கிறீர்களா?”

அப்போஸ்தலர் பவுலடியாரின் வார்த்தைகள், 2 கொரிந்தியர் 6ம் அதிகாரத்தில், ஒரு சக்திவாய்ந்த சத்தமாக தொனிக்கிறது:

  • “இன்றே இரட்சிப்பின் நாள்!”
  • “உங்களுக்கு கிடைத்த‌ கிருபையை வீணாக்காதீர்கள்!”

சபையே…

இது ஒரு சாதாரண பிரசங்கம் அல்ல, இது ஒரு சுய வாழ்க்கையின் எழுப்புதலுக்கான‌ அழைப்பு!

இன்று:

  • இரகசிய பாவம் வெளிப்படும்
  • உலக பாவ‌ சமரசம் உடையும்
  • பரிசுத்தம் மீண்டும் எழும்பும்

நீங்கள் தயாரா?

பரிசுத்தம் vs சமரசம்

 I. கிருபையை வீணாக்காதீர்க‌ள் (வசனம் 1–2)

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள். (6:2)

சபையே,

  • நாளை மனந்திரும்புவேன் என்று சொல்லாதீர்கள்
  • இன்னும் கொஞ்சம் காலம் உலகத்தில் சமரசம் செய்துக்கொண்டு என்று வாழ்ந்து விடுகிறேன் என்று நினைக்காதீர்கள்

இப்போதே மாற்றத்தின் நேரம்!

II. உண்மையான தேவசேவகரின் வாழ்க்கை (வசனம் 3–10)

பவுலடியார் தனது வாழ்க்கையை:

  • துன்பங்களில்
  • சிறைகளில்
  • அவமானங்களில்
  • துன்புறுத்தல்களில்
எப்படி சமாளித்தார், வாழ்ந்தார் என்பதை விளக்குகிறார்

ஆனால் அதே நேரத்தில்:

  • பரிசுத்தத்தில்
  • அறிவில்
  • பொறுமையில்
  • உண்மையான அன்பில்
எப்படி தனது ஊழியத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் எழுதியுள்ளார்.

உண்மையான ஊழியர் மற்றும் பாஸ்டர், 

  • மேடையில் அல்ல, தனது சாட்சியான பரிசுத்தமான‌ வாழ்க்கை மூலமாக நிரூபிக்கப்படுகிறார்!

இந்த நம்பிக்கையினால் தான், பவுலடியார் இப்படி எழுதுகிறார்:

  • மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், 
  • அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், 
  • கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும், 
  • சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், 
  • கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்,
  • அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,
  • துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம் (6:4-10)
இன்று கர்த்தருக்காக ஊழியம் செய்யும் நாம் ஒவ்வொருவரும் இப்படி நம்மைப் பற்றி மனசாட்சியைத் தொட்டு எழுதமுடியுமா?

III. விசாலமான இருதயம் (வசனம் 11–13)

பவுல் சொல்லுகிறார்: “எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது

உண்மையான தேவ ஊழியர்:

  • மக்களை நேசிப்பார்
  • சுயநலமில்லாதவர்
  • சபையை கட்டியெழுப்புவார்

IV. சமரசத்திற்கு எதிரான அழைப்பு (வசனம் 14–18)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” (6:14)

இங்கே பெரிய எதிர்மறை கோடிட்டு காட்டப்படுகின்றது:

  • ஒளி vs இருள்
  • கிறிஸ்து vs பெலியால்
  • தேவ ஆலயம் vs விக்கிரக கோயில்கள்
  • விசுவாசி vs அவிசுவாசி

தேவன் சொல்லுகிறார்:

  • “நீங்கள் உலகத்தோடு சமரசம் செய்யாமல்,  பிரிந்துவாருங்கள்”
  • “நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்”
  • “நான் உங்களுக்கு பிதாவாயிருப்பேன்”

உண்மையான தேவசேவகரின் தகுதிகள்

இந்த அதிகாரம் சொல்லும் தகுதிகள்:

ஊழியரின் ஆவிக்குரிய குணாதிசயங்கள்

  • பரிசுத்தம்
  • உண்மை
  • அன்பு
  • பரிசுத்த ஆவியால் நடத்தப்படுதல்

ஊழியர்களை தாங்கும் பெலன்

  • துன்பங்களில் நிலைத்திருத்தல்
  • அவமானத்திலும் நம்பிக்கையுடன் இருப்பது

ஊழியரின் பரிசுத்த வாழ்க்கை

  • உலகத்தோடு சமரசம் செய்யாமல் வாழ்தல்
  • தேவ ஆலயமாக வாழ்தல்

ஊழியர்களுக்கு தாங்கள் வாங்கிய பட்டங்கள், பெயர்களுக்கு முன்பாக போட்டுக்கொள்ளும், பட்டப்பெயர்கள் தகுதியல்ல,  பரிசுத்தமே முதலாவது தகுதி!

உண்மையான மேய்ப்பருக்கான ஊக்கம்

மேய்ப்பரே…

  • யாரும் உங்களை பாராட்டவில்லை என்றாலும்
  • நீர் உண்மையில் நிலைத்திருக்கிறீர்கள் என்றால்
  • யாருக்குமே தெரியாமல் கண்ணீர் சிந்துகிறீர்கள் என்றால்

தேவன் உங்களை காண்கிறார்! என்பதை மட்டும் மறக்கவேண்டாம்!

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:

  • உங்கள் கண்ணீர் வீணல்ல
  • உங்கள் போராட்டமே உங்கள் சாட்சி
  • உங்கள் விசுவாசமே உங்கள் பெலன்

இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால், நீங்கள் பவுலடியாரின் ஊழிய அடிச்சுவடுகளில் நடக்கிறீர்கள்! என்று பொருள்.

பொய்யான ஊழியர்களுக்கு கண்டனம்

இந்த அதிகாரம் மறைமுகமாக பொய்யான ஊழியர்களை கண்டிக்கிறது:

பொய்யான ஊழியர்கள்:

  • துன்பத்தை தவிர்க்கிறார்கள், தவிர்க்க முயலுவார்கள்
  • பரிசுத்தத்தை விட்டுவிடுகிறார்கள்
  • உலகத்தை நேசிக்கிறார்கள், அதோடு சமரசம் செய்துக்கொள்கிறார்கள்

பொய்யான ஊழியர்கள் தேடுவது:

  • புகழ்
  • பணம்
  • மனிதர்களின் அங்கீகாரம்

ஆனால், அவர்கள் மறந்த சத்தியம் என்னவென்றால்:

  • சிலுவை இல்லாமல் கிரீடம் இல்லை!
  • பரிசுத்தம் இல்லாமல் அபிஷேகம் இல்லை!

இறுதி அழைப்பு (Altar Call)

இப்போது…

உங்கள் இருதயத்தை சோதியுங்கள்:

  • இரகசிய மறைவான‌ பாவம் உள்ளதா?
  • உலகத்தோடு சமரசம் செய்துகொள்கிறீர்களா? 
  • வெளியில் ஒரு வாழ்க்கை, உள்ளே வேறு வாழ்க்கையா?

இப்போதே திரும்பி வாருங்கள், மனந்திரும்புங்கள்!

இப்பொழுதுதே தீர்மானியுங்கள்:

  • சமரசமா? அல்லது பரிசுத்தமா?
  • உலகமா? அல்லது கிறிஸ்துவா?

பரிசுத்தமானவர்களே தேவனுடைய மகிமையை காண்பார்கள்!

இப்போது…

இந்த வார்த்தையை கேட்ட பிறகு நீங்கள் மாறாமல் இருக்க முடியாது…

நீங்கள் இரண்டு வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்:

  • பரிசுத்தம்
  • அல்லது சமரசம்

சபையே…

நீங்கள் எவ்வளவு காலம்
இரண்டு வாழ்க்கை வாழப்போகிறீர்கள்?

  • வெளியே ஒரு கிறிஸ்தவன்
  • உள்ளே ஒரு சமரசமான மனிதன்?

இன்று தேவன் அழைக்கிறார்:

“பிரிந்துவா… பரிசுத்த வாழ்க்கை வாழ வா … நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்!”

இப்போதே…

  • உங்கள் கண்களை மூடுங்கள்
  • உங்கள் இருதயத்தை திறந்து சொல்லுங்கள்:

“கர்த்தாவே…
நான் திரும்பிவருகிறேன்
நான் சமரசத்தை விட்டுவிடுகிறேன்
நான் பரிசுத்தத்தை தேர்ந்தெடுக்கிறேன்
என்னை சுத்திகரித்தருளும்
என்னை நிரப்பும்!”

  • பரிசுத்தம் இல்லாமல் தேவனை காண முடியாது
  • சமரசம் உள்ளவர்களுக்கு அபிஷேகம் நிலைக்காது

பரிசுத்தமே உங்கள் அழைப்பு! சமரசம் உங்கள் அழிவு!

Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?